மக்களின் புகார்களை விசாரிக்க உள்விவகார சுங்கப் பிரிவு திறப்பு

99 0

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பொது முறைப்பாடுகளைப் பெற்று விசாரணை செய்வதற்கான உள்விவகாரப் பிரிவு நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டியவால் திறந்துவைக்கப்பட்டது.

பொதுமக்களுக்கும் சுங்கத்துக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதே இதன் நோக்கம் என அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

கொடுக்கப்பட்ட வருவாய் இலக்குகளுக்கு அப்பால் சென்ற சுங்கத் திணைக்களம் நாட்டுக்கு தனித்துவமான பணியை செய்து வருவதாகவும் அதன் காரணமாக பல்வேறு பாராட்டுக்களும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

எனவே, இப்பிரிவு பொதுமக்களுக்கும் திணைக்களத்துக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என சுட்டிக்காட்டிய அமைச்சர், எதிர்காலத்தில் உள்ளுர் வருவாய் மற்றும் கலால் திணைக்களங்களுக்கும் இந்த முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.