மர்மப் வெடிப் பொருளொன்று வீதியின் ஓரத்திலுள்ள புற்தரையில் கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சந்திவெளி பொலிஸார் அதனை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த, வெடிப்பொருளினை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்காக குண்டு செயலிழக்கும் இராணுவப் பிரிவினரின் உதவியை நாடியுள்ளதாகவும் இது கடந்த யுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினரால் கைவிடப்பட்டதாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

