ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 45 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த முறைப்பாடுகளில் பெரும்பாலானவை அரச அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதை உள்ளடக்கியதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

