திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் கசிப்பு மற்றும் கோடாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்கரைச் சேனை பிரதேசத்தில் தொடர்ந்து கசிப்பு உற்பத்தி இடம் பெறுவதாகவும் அதனை அண்டிய பிரதேசங்களில் கசிப்பு விற்பனை செய்யப்படுவதாகவும் பொலிஸாருக்கு கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 3 இலட்சத்து 80 ஆயிரத்து 75 மில்லி லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டதாகவும் அவற்றுடன் இரண்டு பீப்பாய்களும் கைப்பற்றப்பட்டதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் சம்புக்களி கடற்கரை சேனை வட்டாரத்தை சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார் .
கைப்பற்றப்பட்ட கோடாவையும் கைது செய்யப்பட்ட நபரையும் நேற்று (30) மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் கைது செய்யப்பட்டவரை சரீர பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்றம் அடுத்த மாதம் 13 ஆம் திகதி இது தொடர்பிலான விசாரணைகளை ஒத்திவைக்க உத்தரவிட்டுள்ளது.

