சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிதிகொட பகுதியில் தடுகம் ஓயாவில் நேற்று (28) ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சீதுவை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் 45 முதல் 50 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் 05 அடி 10 அங்குலம் உயரம் உடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமானது, நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

