ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க பயணித்த ஜீப் வண்டி ஜாவத்தை வீதியில் சலுசல பிரதேசத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று புதன்கிழமை (17) இரவு திஸ்ஸ அத்தநாயக்க பயணித்த ஜீப் வண்டியும் கார் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தின் போது 3 பேர் காயமடைந்துள்ளதுடன், பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு காயங்கள் ஏற்படவில்லை.
மேலும், காயமடைந்தவர்களில் காரின் சாரதி மற்றும் பயணியொருவரும் அடங்குவதாகவும், காயமடைந்தவர்கள் நாரஹேன்பிட்டி பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

