குளவி கொட்டுக்கு இலக்காகி 8 மாணவர்கள் காயமடைந்துள்ள நிலையில் பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (17) புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
நோர்வுட் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 9 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 4 மாணவிகளும் 4 மாணவர்களுமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாணவர்கள் பாடசாலையை முடித்துவிட்டு மீண்டும் வீடு செல்ல தயாராக இருக்கும் போது பாடசாலைக்கு அருகில் உள்ள மரமொன்றிலிருந்த குளவி கூடு ஒன்று கலைந்ததால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

