மூன்று கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் நாளையும் (08) நாளை மறுதினமும் (09) தொடர்ந்து 48 மணிநேரம் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது சிந்தக பண்டார மேலும் கூறுகையில்,
இன்று மாலை 4 மணி தொடக்கம் மத்திய அஞ்சல் பரிமாற்ற நிலையத்தில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஏனைய தபால் நிலையங்களில் இன்று (07) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை ஆரம்பமாகும் என அறிவித்துள்ளார்.

