இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (05) நள்ளிரவு இடம் பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் பல் துறை ஆளுமை மிக்க 42 வயதுடைய குடும்பஸ்தரே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று அடம்பன் வீதியில் உள்ள தனது வீட்டிற்கு முன் நின்று தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இவரை வாகனமொன்று மோதிவிட்டு சென்றுள்ளது .
இதன் போது குடும்பத்தினரின் உதவியுடன் உடனடியாக அடம்பன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளதுடன் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனையின் பின்னர் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்படுகின்றது.
‘ கம்பிகளின் மொழி பிறேம் ‘ என அழைக்கப்படும் கோபாலகிருஷ்ணன் கோகுல் பிறேம்குமார் முன்னாள் போராளியாவார்.
ஒரு கால் மற்றும் ஒரு கையையும் இழந்த இவர் பல் துறை சார் ஆளுமை மிக்கவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.