அரசாங்கத்துடன் தொடர்புகளை பேணும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள்!

108 0

ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 15 முதல் 20 வரையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தம்மை விடவும் அரசாங்கத்துடன் கூடுதலாக தொடர்புகளை பேணுவது இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே என அவர் சுட்டிக்காட்டடியுள்ளார்.

எவ்வாறெனினும், தாம் அரசாங்கத்தில் அமைச்சு பதவி ஒன்றை பெற்றுக்கொள்ளும் உத்தேசத்தில் இல்லை எனவும் ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு ஆதரவினை வழங்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் நடவடிக்கைகளை சீர்குலைக்கும் எந்தவிதமான திட்டங்களும் தம்மிடத்தில் கிடையாது என ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.