அக்குரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அக்குரஸ்ஸ – தெனியாய வீதியில் உதார மாவத்தை பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதி வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (18) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
மாத்தறை ,தெலிஜ்ஜவில பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய வயோதிபப் பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அக்குரஸ்ஸயிலிருந்து அமலகொட நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த வயோதிபப் பெண் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது வீதியில் பயணித்த வயோதிபப் பெண் காயமடைந்துள்ள நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரது சடலம் மாத்தறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, மோட்டார் சைக்கிள் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்குரஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

