சர்வதேச ஈரநில பூங்கா ஒன்றியத்தின் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆசிய நாடுகளின் முதலாவது மாநாடு நாளை ஆரம்பம் !

113 0
சூழல் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் சர்வதேச ஈரநில பூங்கா ஒன்றியத்தின் முதலாவது மாநாடு அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஆசிய நாடுகளுக்கிடையே நாளை (17) ஆரம்பமாகவுள்ளது.

வோட்டர்ஸ் எட்ஜில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் ஆரம்ப விழா நடைபெறவுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் இதனை ஏற்பாடு செய்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள 15 நாடுகளில் உள்ள 70 க்கும் மேற்பட்ட ஈரநிலப் பூங்காக்களில் இருந்து கிட்டத்தட்ட 100 பிரதிநிதிகள் இதில் பங்கேற்கின்றனர்.

இந்தியா சார்பில் 6 பிரதிநிதிகள், கொரியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் 18 பிரதிநிதிகளும், சீனாவை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 பிரதிநிதிகளும், பிலிப்பைன்ஸை பிரதிநிதித்துவப்படுத்திய 7 பிரதிநிதிகளும் மற்றும்  மியன்மார்,  மொங்கோலியா, ஜேர்மனி, நேபாளம், ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தலா 2 பிரதிநிதிகளும், நியூஸிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 3 பிரதிநிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தற்போது நாட்டுக்கு வந்துள்ளனர்.

மேலும், மலேசியா, அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பானை பிரதிநிதித்துவப்படுத்தும் தலா ஒரு பிரதிநிதிகள் மூன்று பேரும் மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 05 ஈரநில பூங்கா பிரதிநிதிகள் பங்குபற்றவுள்ளனர்.

இந்த மாநாட்டின் போது இந்த பிரதிநிதிகள் ஜூன் 20 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் சந்திக்க உள்ளனர். அன்று ரம்சா வலய நிலையத்திற்கும் தியசரு ஈரநில பூங்காவிற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதுடன் இலங்கையின் ஈரநில மையங்களின் மத்திய ஈரநில மையமாக தியசரு ஈரநில பூங்கா அறிவிக்கப்படும்.

இந்த மாநாட்டில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர் யாதாமினி குணவர்தன ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இது சம்பந்தமான நிகழ்வில் கருத்துத் தெரிவித்த நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நாட்டில் முதலாவது ஈரநில மாநாட்டை நடாத்த முடிந்தமை தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது. நாட்டில் சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்த இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும் என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.