யூரோ கால்பந்தாட்ட தொடரின் கொண்டாட்ட நிகழ்வில் துப்பாக்கிச்சூடு

118 0

யூரோ 2024 ஆம் ஆண்டுக்கான கால்பந்தாட்ட தொடரின் கொண்டாட்ட நிகழ்வில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஜேர்மனியின் சாக்சோனி-அன்ஹால்ட் மாகாணத்தில் Euro 2024 கால்பந்தாட்டப் போட்டிகள் ஆரம்பமானதை கொண்டாடுவதற்காக, ஒழுங்கு செய்திருந்த நிகழ்விலேயே இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது நிகழ்வில் கலந்துகொண்ட நபரொருவர் திடீரென அங்கிருந்த ரசிகர்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடாத்தியுள்ளார்.

இந்த தாக்குதலில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

யூரோ கால்பந்தாட்ட தொடரின் கொண்டாட்ட நிகழ்வில் துப்பாக்கிச்சூடு | Euro 2024 Football Matches Suddenly Attacked

 

இதன்போது தாக்குதலை நடத்தியவரை கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், மருத்துவமனைக்குக் அவரை கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.