10 ஆவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இலங்கையில் பல்வேறு பிரதேசங்களில் 10 நாள் யோகா “மஹோத்சவ்” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றம் இலங்கையின் சுற்றுலா அமைச்சு இணைந்து இந்த யோகா “மஹோத்சவ்” வை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த யோகா “மஹோத்சவ்” இலங்கையின் சுற்றுலாத் தலங்களான சிகிரியா, நெடுந்தீவு , மாத்தறை கடற்கரை, காலி கோட்டை, கொழும்பு தேசிய நூதனசாலை, திருகோணமலை ஹெய்சர் விளையாட்டு மைதானம் மற்றும் தொந்தர கலங்கரை விளக்கு உள்ளிட்ட இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.






