மஸ்கெலியாவில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வு பணியில் ஈடுபட்ட இருவர் கைது

140 0

நுவரெலியா, மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வு பணியில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (14) கைது செய்யப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

மஸ்கெலியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா, மஸ்கெலியா பிரதேசத்தைச் சேர்ந்த  37 மற்றும் 49 வயதுடைய இரண்டு நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து மாணிக்கக் கல் அகழ்வு பணிக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.