இடம்­பெ­யர்ந்த நிலையில் 120 மில்­லியன் மக்கள் : ஐ.நா. தெரி­விப்பு !

116 0

2023 ஆரம்பம் முதல் 2024 மே மாதம் வரை உலகில் சுமார் 120 மில்­லியன் மக்கள் பல­வந்­த­மாக இடம்­பெ­யரச் செய்­யப்­பட்ட நிலையில் இருந்­தனர் என ஐ.நா வியா­ழக்­கி­ழமை (13) தெரி­வித்­துள்­ளது.

அக­தி­க­ளுக்­கான ஐ.நா. உயர் ஸ்தானி­க­ரா­ல­யத்தின் அறிக்­கை­யொன்றில் இத்­த­ர­வுகள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

அக­திகள், புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்கள் மற்றும் உள்­ளக ரீதி­யாக இடம்­பெ­யர்ந்தோர், நாடாற்ற நிலையில் உள்­ள­வர்கள் குறித்த  புள்­ளி­வி­ப­ரங்கள் இந்த அறிக்­கையில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

2023 இறு­தியில், துன்­பு­றுத்­தல்கள், சண்­டைகள், வன்­மு­றைகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் படு­மோ­ச­மான சட்டம் ஒழுங்கு மீறல்­க­ளி­லி­ருந்து தப்­பு­வ­தற்­காக உலகில் 117.3 மில்­லியன் மக்கள் இடம்­பெ­யர்ந்­தி­ருந்­தனர் என மேற்­படி அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மே மாதம் 120 மில்­லியன் மக்கள் உல­க­ளா­விய ரீதியில் இடம்­பெ­யர்ந்­தி­ருந்­தனர். இது 2022 ஆம் ஆண்டின் நிலை­மை­யை­விட 10 சத­வீதம் அதி­க­மாகும். இந்த எண்­ணிக்கை உலக மக்கள் தொகையில் 1.5 சத­வீ­த­மாகும் எனவும் அவ்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பெரும் அள­வி­லான இடப்­பெ­யர்­வு­க­ளுக்கு மோதல்­களே கார­ண­மாக இருந்­தன என அக­தி­க­ளுக்­கான ஐ.நா. உயர் ஸ்தானிகர் பிலிப்போ கிராண்டி தெரி­வித்­துள்ளார்.

“சர்­வ­தேச புவிசார் அர­சி­யலில் மாற்­ற­மொன்று ஏற்­பட்டால் தவிர, துர­திஷ்­ட­வ­ச­மாக இந்த எண்­ணிக்கை உயர்­வ­டையும் நிலை­யையே நான் காண்­கிறேன்” என அவர் கூறினார்.

“தொடர்ச்­சி­யாக 12 ஆவது வரு­ட­மாக அதிகள் மற்றும் இடம்­பெ­யர்ந்­தோரின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. 114 மில்­லி­ய­னி­லி­ருந்து 120 மில்­லி­ய­னாக அது அதி­க­ரித்­துள்­ளது. இந்த எண்­ணிக்­கைக்குப் பின்னால் பல மனித துய­ரங்கள் உள்­ளன. ஒற்­றுமை மற்றும் ஒரு­மு­கப்­பட்ட செயற்­பா­டுகள் மூலமே இத்­து­ய­ரங்­களைப் போக்க முடியும்” எனவும் அவர் தெரி­வித்துள்ளார்.

2023 ஏப்­ரலில் ஆரம்­ப­மான சூடான் மோதல் கார­ண­மாக, உலகின் மிகப் பெரிய மனி­தா­பி­மான மற்றும் இடம்­பெ­யர்வு பிரச்­சி­னை­யொன்று ஏற்­பட்­ட­தா­கவும் இதனால் 2023 டிமெம்பர் வரை 6 மில்­லியன் பேர் இடம்­பெ­யர்ந்­தி­ருந்­தன்ர எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தற்­போது தொடரும் காஸா யுத்தம் கார­ண­மாக 1.7 மில்­லியன் பேர், அதா­வது காஸா மக்­களில் 75 சத­வீ­த­மானோர் காஸா­வுக்குள் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர் எனவும் மேற்­படி அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பலஸ்­தீ­னத்­துக்­கான ஐ.நா நிவா­ரண முக­வ­ரத்தின்  (UNRWA) தக­வ­லின்­படி, 60 இலட்சம் பலஸ்­தீ­னர்கள் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர் எனவும், அவர்­களில் சுமார் 1.6 மில்­லியன் பேர் காஸாவில் உள்­ளனர் எனவும் தெரி­வித்­துள்­ளது.

மியன்மார், ஆப்­கா­னிஸ்தான், உக்ரேன், கொங்கோ ஜன­நா­யகக் குடி­ய­ரசு, சோமா­லியா, ஹெய்ட்டி, சிரியா, ஆர்­மே­னியா ஆகிய நாடு­க­ளி­லி­ருந்தும் மோதல்கள் மற்றும் வன்­மு­றைகள் கார­ண­மாக மக்கள் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது,

அக­திகள் மற்றும் குடி­யேற்­ற­வா­சி­களில் பெரும்­பா­லானோர் செல்­வந்த நாடு­க­ளையே நாடு­வ­தாக எண்­ணப்­ப­டு­கின்ற போதிலும், அவர்­களில் 75 சத­வீ­த­மானோர் குறைந்த மற்றும நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்குச் சென்றுள்ளனர் எனவும் மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், புதிய புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்களில் அரைப்பங்கு 5 நாடுகளுக்கே கிடைத்துள்ளதாகவும் ஆகக்கூடுதலாக அமெரிக்காவுக்கு 1.2 மில்லியன் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.