பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் விழிப்புணர்வு நடை பவனி!

149 0

“நில மறுசீரமைப்பு, பாலைவனமாதல் மற்றும் வறட்சியை தாங்கும் தன்மை” எனும் தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்பட்ட  இவ்வருடத்துக்கான தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை எதன் எருவில் பற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னத்தின் வழிகாட்டுதலில் சுற்றாடல் தின நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், “பிளாஸ்டிக்  கழிவு முகாமைத்துவம்” எனும் கருப்பொருளின்கீழ் பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அலுவலக உத்தியோகத்தர்களினால் பொலித்தீன் பாவனையினால் ஏற்படும் பாதக விளைவுகள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பதாதைகளை தாங்கிய வண்ணம் இந்த நடைபவனி  களுவாஞ்சிகுடி பேருந்து நிலையம் ஊடாக பொதுச்சந்தைப் பகுதிக்கு சென்றடைந்து, துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு  விநியோகிக்கப்பட்டன.

இதன்போது, 200 இற்கும் மேற்பட்ட அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன், உதவி பிரதேச செயலாளர்  சத்யகௌரி தரணிதரன் மற்றும் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.