வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் பி.பி.எல் கிரிக்கெட் தொடரில் 2014 உயர்தர பழைய மாணவர்கள் அணி வெற்றி

153 0

முதல் தடவையாக வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் நடத்தப்பட்ட பி.பி.எல் என்ற பெயரிலான கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 23ஆம் திகதி ஆரம்பமாகி, இரண்டாம் நாளான 24ஆம் திகதியும் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் பாடசாலை சார்பாக ஓர் அணியும், பழைய மாணவர்களின் 20 அணிகளும் பங்குபற்றின.

நேற்று 2010 மற்றும் 2014 ஆண்டுகளின் உயர்தரப் பிரிவு அணிகளுக்கு இடையே நடைபெற்ற இறுதிப் போட்டியில் 2014 உயர்தரப் பிரிவு அணி வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.

இந்த போட்டியில் 2014 ஆண்டு அடியை சேர்ந்த ரி.சரவணன் சிறந்த துடுப்பாட்ட வீரனாகவும், 2010 அணியை சேர்ந்த எஸ்.டுசியந்தன் சிறந்த பந்து வீச்சாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தின் தலைவரும் வட்டுக்கோட்டை, இந்து கல்லூரியின் பழைய மாணவனுமான ப.தர்மகுமாரன் பிரதம அதிதியாக பங்குபற்றியதுடன், இந்த நிகழ்வில் கல்லூரியின் அதிபர் லங்கா பிரதீபன், பழைய மாணவர் சங்கத்தினர், போட்டியாளர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.