காட்டுத் தீ : கனடாவின் எண்ணெய் வளமிக்க பகுதிக்கு அச்சுறுத்தல்

33 0

கனடாவின் எண்ணெய் வளம் மிக்க போர்ட் மெக்முரே பகுதியில் (Fort McMurray) பாரிய காட்டுத்தீ தீவிரமாகப் பரவி வருகிறது.

இதன் காரணமாக நான்கு புறநகர்ப் பகுதிகளில் உள்ள சுமார் 6,000 மக்களை  வெளியேறுமாறு செவ்வாய்க்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.

வரட்சி மற்றும் பலத்த காற்றினால் ஆல்பர்ட்டாவின் மேற்கு மாகாணத்தில் கடந்த வாரம் முதல் காட்டுத் தீ தீவிரமடைந்துள்ளது.

தற்போது காட்டுத் தீ தென்மேற்கே சுமார் 13 கிலோ மீற்றர் (8 மைல்) தொலைவில் உள்ளது. அங்கு மணிக்கு 40 கிலோ மீற்றர் (24.8 மைல்) வேகத்தில் காற்று வீசியுள்ளது.

பலத்த காற்று வீசுவது துரதிர்ஷ்டவசமாக எங்களுக்கு சாதகமானதாக இல்லை.  காற்றின் வேகம் குறையும் வரை காட்டு தீ நகரத்தை நோக்கி தொடர்ந்து பரவி வரும் என  ஆல்பர்ட்டா காட்டுத் தீ தகவல் தொடர்பு அதிகாரி ஜோசி செயின்ட்-ஓங்கே தெரிவித்துள்ளார்.

காட்டுத் தீ தீவிரமடைந்துள்ளதால் வானம் புகையால் சூழப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக தீயணைப்பு வீரர்கள் தீ பரவும்  பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். 10,000 ஹெக்டயர் பரப்பிலான வனப்பகுதிகளில் தீ பற்றி எரிந்து வருகிறது.

அபாசண்ட், பீக்கன் ஹில், ப்ரேரி க்ரீக் மற்றும் கிரேலிங் ஆகிய பகுதிகளிர் வசிப்பவர்கள் மாலை 4 மணிக்குள் வெளியேற வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில், போர்ட் மெக்முரேயில் பரவி பாரிய காட்டுத்தீ 90,000 குடியிருப்பாளர்களை வெளியேற்ற கட்டாயப்படுத்தியது.  ஒரு நாளைக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டது.