அஹுங்கல்ல, மரதான பகுதியில் நேற்று (10) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பழிவாங்கும் நடவடிக்கை என தெரியவந்துள்ளது.
கடந்த 8ஆம் திகதி அஹுங்கல்ல லோகன்வத்த பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் தந்தையான கீர்த்திசேன என்பவரை கொலை செய்தமைக்கான பழிவாங்கும் நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
டுபாயில் மறைந்திருக்கும் அண்மையில் கொல்லப்பட்ட கீர்த்திசேன ஆப்ரூரின் மகனே நேற்றைய துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபர் 5 முறை துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும், சில தோட்டாக்கள் அவரது வயிற்றில் பாய்ந்ததாகவும் கூறப்படுகிறது.
அஹுங்கல்ல மரதான பிரதேசத்தை சேர்ந்த 54 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வீட்டில் இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

