ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ்த் தலைமைகள் ஒன்றிணைந்து வலுவான தீர்மானம் எடுக்கவேண்டும்

136 0

வடகிழக்கில் உள்ள அனைத்து தமிழ் தலைமைகளும் ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வலுவான தீர்மானம் ஒன்றை எடுத்து தமிழ் மக்கள் முன் கொண்டுசெல்லும்போது அதனை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈபிஆர்எல்எப்.பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.

தமிழ் கட்சிகள் ஒன்றுபடாது முடிவுகள் எடுக்கப்பட்டு அது தமிழ் மக்கள் முன்பாக கொண்டுசெல்லப்படும்போது தமிழ் மக்களை அது விரக்தி நிலைக்குத் தள்ளுவதுடன் அது தமிழ் மக்களின் எதிர்கால செயற்பாடுகளைப் பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் நலன்கள் தொடர்பில் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கூடுதல் அக்கரை செலுத்தவேண்டும் என்ற வேண்டுகோளையும் அவர் இதன்போது முன்வைத்தார்.

மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கோரிக்கைகளை முன்வைத்தார்.