குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச் ) சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

12 0

குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்தை கடந்த 03 ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சான்றுரைப் படுத்தியிருக்கிறதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை (7) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சபாநாயகரின் அறிவிப்பின்போதே, சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் இதனை தெரிவித்தார்.

குறித்த சட்டமூலம் 2024 ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்தின் பின்னர் நிறைவேற்றப்பட்டது.

இதற்கமைய குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் 2024 ஆம் ஆண்டு 25ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமாக கடந்த 03ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது.