வவுனியாவில் 5 கிலோ கஞ்சவுடன் இளைஞன் கைது

11 0

வவுனியாவில் 5 கிலோகிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருளுடன் நபரொருவர்  அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வவுனியா புளியங்குளம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் திடீர் சோதனை ஒன்றை நடாத்திய அதிரடிப்படையினர் வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் வைத்து நேற்று திங்கட்கிழமை (6) இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை சோதனைக்குட்படுத்தியதில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 5கிலோ 124 கிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருளை மீட்டுள்ளனர்

வவுனியா செக்கட்டிப்பிளவு பகுதியை சேர்ந்த 26 வயதுடை இளைஞரே மேற்படி கைது செய்யப்பட்ட நபராவார். மேலதிக விசாரனைகளின் பின்னர் கைது செயப்பட்ட நபரை வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.