தனிச் சிங்கள சட்டத்தை எதிர்த்து பதவியை தூக்கி எறிந்த ஈழவேந்தனனின் நினைவேந்தல்

14 0

1956 ஆம் ஆண்டில் தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்துத் தன் மத்திய வங்கி உயர் பதவியைத் தூக்கியெறிந்த மா.க.ஈழவேந்தனின் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் (Jaffna)  இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது நேற்றையதினம் (05.05.2024) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.இந்த அஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.