நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

24 0

நுவரெலியா ஹங்குரங்கெத பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அதிகாரிகம பிரதேசத்தில் உள்ள அம்பேவளை ஓயாவில் நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஹங்குரனங்கெத பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பேவளை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று மாலை நபரொருவருடன் அம்பேவளை ஓயாவிற்கு நீராடச் சென்றுள்ள நிலையில் திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரது சடலம் ரிகில்லகஸ்கட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்குரன்கெத பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.