மேதின இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்துள்ள இந்திய இசைக்கலைஞர்கள்

116 0

மே தின  பேரணியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியில்  கலந்துகொள்வதற்காக  இந்திய இசைக்கலைஞர்கள் இன்று (30) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர் .

இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக விஜய் பாலகிருஷ்ணன், ரம்யா , டேனியல் ஜெயராம், ரேஷ்மா சுந்தரம் ஆகியோர் வருகை தந்துள்ளனர் .

இந்த இசை நிகழ்ச்சியானது நாளை (01) ம் திகதி மாளிகாவத்தை P.D சிரிசேன விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தர்மர் சத்ய பிரகாஷ் மற்றும் வர்ஷா போன்ற இந்திய இசைக்கலைஞர்கள்  இந்த இசை நிகழ்வில் கலந்துகொள்ள இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது .