அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர் விசேட நடவடிக்கை – 17 வயதிற்குட்பட்ட ஏழு பேர்கைது

15 0

சிட்னிதேவாலயத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் சிட்னியின் பல பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பாரிய நடவடிக்கை இடம்பெறுவதாக அவுஸ்திரேலியாவின் பொலிஸ் ஆணையாளர் ரீஸ் கேர்சோவ் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின் போது ஏழு பதின்மவயதினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மதரீதியாக தூண்டப்பட்ட வன்முறை தீவிர சிந்தாந்தத்தினால் ஈர்க்கப்பட்டடிருந்தஏழு பேரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

13இடங்களில் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்றன 15- 16- 17 வயதுடைய ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமானவர்கள் பொதுவான நோக்கத்திற்காக இணைந்திருந்தனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் சமூகத்திற்கு உடனடி ஆபத்து இல்லை என காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.