மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு 30 ஆம் திகதி!

11 0

சட்டவிரோதமாக  சம்பாதித்த 27 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான செலவில் கொழும்பு கின்சி வீதியில் சொகுசு வீடு ஒன்றை கொள்வனவு செய்தார் என பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இம்மாதம் 30ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (25) அறிவிக்கப்படவிருந்தது. ஆனால் இது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 30ஆம் திகதி அறிவிக்கப்படும் என உயர் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மஹரசிங்க  தெரிவித்தார்.

இந்தக் குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.