ஜெயில் அறை போன்ற அமைப்புடன் வாடகைக்கு விடப்படும் குடியிருப்பு

22 0

ஜெயில் அறை போன்ற அமைப்புடன் கூடிய குடியிருப்பு ஒன்று மாதம் ரூ.77 ஆயிரம் வாடகைக்கு விடப்படுவதாக ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இங்கிலாந்தின் டட்லி பகுதியில் அமைந்திருந்த போலீஸ் நிலையத்திற்கு சொந்தமான இந்த கட்டிடம் கடந்த 2017-ம் ஆண்டு மூடப்பட்டு குடியிருப்புகளாக மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்குள்ள ஒரே ஒரு சிறை போன்ற அறையுடன் கூடிய பகுதியை பிளாட்டாக மாற்றி அதனை வாடகைக்கு விடுவதாக அறிவித்துள்ளனர். இதற்கு வாடகை கட்டணமாக மாதம் 750 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.77 ஆயிரம்) நிர்ணயித்துள்ளனர்.

மேலும் சிறை அமைப்புடன் கூடிய அறை மட்டுமல்லாது அந்த பிளாட்டின் சமையலறை மற்றும் 3 அறைகள் உள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Obsessed that the old Dudley police station has been converted to studio flats, and for one of the advertised lettings they’ve kept the holding cell as a \”feature\”. pic.twitter.com/RcIeZdomWg— Liam (@L4nkyLi4m) April 21, 2024″,