ஊடக அடக்குமுறைகளை பார்த்துக்கொண்டிருக்க முடியாது: சுகாஷ் காட்டம்

18 0

ஊடக அடக்குமுறை நடவடிக்கைகளை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், இன்றையதினம் (23.04.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கையில் மேலும் அவர் கூறுகையில்,

“தமிழ் ஊடகங்களின் குரல்வளையை அடக்க முற்படுவது தமிழ்த் தேசத்தின் ஆன்மாவை நசுக்குவதற்கு ஒப்பானதாகும்.

ஊடக அடக்குமுறைக்கு எதிராக எமது வன்மையான கண்டனங்களைத் தெரிவிக்கின்றோம்.

ஊடக உறவுகளுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அவர்களுக்காக வீதிக்கு இறங்கவும் நாங்கள் தயங்கமாட்டோம் என்பதைச் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும், தமிழ் பத்திரிகை ஒன்றின் ஆசிரியரை அச்சுறுத்துவதற்காக விசாரணைகளை முன்னெடுப்பதை பார்த்து கொண்டிருக்க மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.