இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

13 0

இலங்கை மின்சார ஊழியர் சங்கம் நாளை புதன்கிழமை (24) நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர்.

வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்குகிடைத்த தகவலின் அடிப்படையில்  முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்கள் மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறாக எந்தவொரு வீதியையும் கடக்க வேண்டாம் எனவும், பொல்துவ சுற்றுவட்டத்தை சுற்றி ஆர்ப்பாட்டம் அல்லது வன்முறையில் ஈடுபட வேண்டாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது .