புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் யேர்மனி வாழ் தமிழீழமக்களின் நிதிப்பங்களிப்பில் உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது. காணொளி

1583 0

தாயகத்தில் இயற்கை அனர்த்தத்தின் பேரிடரால் அல்லல்படும் எமது மக்களின் தேவையறிந்து முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் கெருடமடு, வசந்தபுரம், மண்ணாங்கட்டல் பகுதிகளில் வாழ்ந்த 403 பேர்கள் அடங்கிய 175 குடும்பங்கள் மண்ணாங்கட்டல் பாடசாலையில் இடம்பெயர்ந்திருந்த நிலையில் 20.12.2023 இன்று யேர்மனி வாழ் தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

தாயகத்தில் இயற்கை அனர்த்தத்தின் பேரிடரால் அல்லல்படும் எமது மக்களின் தேவையறிந்து முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் பேராறுக் கிராமப் பகுதிகளில் வாழ்ந்த 137 பேர்கள் அடங்கிய 40 குடும்பங்கள் பேராறுப் பாடசாலையில் இடம்பெயர்ந்திருந்த நிலையில் 20.12.2023 இன்று யேர்மனி வாழ் தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.