இலங்கை மீனவர்கள் ஐந்து பேர் இந்தியாவில் கைது

65 0

இராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை மீனவர்கள் ஒரு படகுடன் ஐந்து பேரை இந்திய கடலோர காவல்படை இன்று செவ்வாய்க்கிழமை (21) மதியம் கைது செய்து விசாரணைக்காக தமிழக கடலோர காவல் குழுமம் பொலிஸாரிடம்  ஒப்படைத்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர்கள் மீன் பிடிப்பதற்காக எல்லை தாண்டி வந்தார்களா அல்லது வேறு ஏதும் கடத்தல் பொருள் கொண்டு வந்தார்களா என்ற கோணத்தில் பொலிஸார் அவர்களை விசாரணை நடத்த உள்ளனர்.