மாவீரர் வாரத்தை முன்னிட்டு துயிலுமில்லத்திற்கு முன்னால் சிரமதானம்!

52 0

மாவீரர் வாரம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் ஞாயிற்றுக்கிழமை (19) கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக துப்பரவாக்கல் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

 

இந்த சிரமதான பணிகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து மேற்கொண்டனர்.