நாட்டில் பெய்து வரும் கன மழை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதன்படி, பதுளை ,கொழும்பு , காலி , ஹம்பாந்தோட்டை ,களுத்துறை, கண்டி , கேகாலை குருநாகல், மாத்தறை , மாத்தளை ,இரத்தினபுரி, ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்கிழமை (31) வெளியிடப்பட்ட குறித்த அறிவிப்பு இன்று புதன்கிழமை (01) வரை அமுலில் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

