எதிர்வரும் புதிய பருவ காலத்திலும் வறட்சி ஏற்படக்கூடும் என ஆய்வுகளின் தகவல்கள் தெரிவிப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த பருவ காலத்தை விட எதிர்வரும் பருவ காலங்களில் அதிக வறட்சி நிலவக்கூடும் எனவும் தற்போதைய பருவகாலத்தில் குறிப்பிட்ட தினத்திற்குள் பயிர்ச்செய்கை மேற்கொள்ளாத விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கப்பட மாட்டாதெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார் .

