எதிர்வரும் தினங்களில் நாட்டின் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

251 0

நிலவும் வறட்சியான காலநிலையில் எதிர்வரும் தினங்களில் சிறிய மாற்றமொன்றை எதிர்ப்பார்ப்பதாக காலநிலை அவதான ்நிலையம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 28ம் திகதி தொடக்கம் இந்த மாற்றம் ஏற்படக்கூடும் என அந்த நிலையம் அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதியில் தொடர்ந்தும் வறட்சியான காலநிலையே நிலவுகிறது.

எவ்வாறாயினும் , காலி , மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியக்கூடும்.

மேல் , சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் காலை நேரங்களில் பனிமூட்ட காலநிலை நிலவக்கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.