சென்னை ஆர்.கே நகரில் போட்டியிடும் பன்னீர்செல்வத்தின் புரட்சித்தலைவி அம்மா அணி பழைய வண்ணாரப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பனிமையை திறந்தது. நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், ஆர்.கே நகரில் முறையாக தேர்தல் நடைபெறும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.
மேலும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மின் கம்பம் சின்னத்தில் உள்ள இரண்டு விளக்குகளும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை குறிப்பிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.