சிற்றூந்து மோதுண்டு ஒருவர் பலி

222 0

தலாவ – ஜயகஹ சந்தி பிரதேச்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் 70 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் வீதியில் பயணித்து கொண்டிருந்த போது, தம்புத்தேகம தொடக்கம் அனுராதபுரம் வரை பயணித்த சிற்றூந்து ஒன்று மோதுண்டதினால் குறித்த நபர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சிற்றூந்தின் சாரதியை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.