ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

287 0

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ 3 மாத காலம் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுத்த கோரிக்கைக்கு அமைய குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் சேர்த்த சொத்துக்கள் தொடர்பில் சரியான ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறிய குற்றச்சாட்டின் பேரில் தொடரப்பட்ட 5 வழக்குகள் தொடர்பிலேயே பிரதம நீதவான் குறித்த அறிவித்தலை விடுத்துள்ளார்.