சாரதியை தாக்கி முச்சக்கரவண்டியை திருடிய மூவர் கைது..!

228 0

சாரதியை தாக்கிவிட்டு முச்சக்கரவண்டியை திருடி சென்ற மூவரை பொலிஸார் மடக்கிப்பிஓடித்த சம்பவம் தம்புத்தேகம – கல்நெவ வீதியில் இடம்பெற்றுள்ளது.

மேலும் குறித்த சம்பவமானது தம்புத்தேகம ஊடாக கல்நெவசெல்லும் வீதியிலுள்ள, கலாஓயா பாலத்திற்கருகில் இடம்பெற்றுள்ளதாகவும், குறித்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு சாரதி அளித்த தகவலின் அடிப்படையில், முச்சக்கரவண்டி மற்றும் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர்.

அத்தோடு கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களில் ஹபராதுவ மற்றும் கம்புருபிடிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு ஆண்களும், இவர்களுடன் மல்வானை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.