ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு இழப்பீடு வழங்க அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தால் மேற்கொள்ளப்படும் நிர்மாணப் பணிகள் பொருளாதார நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதன் தலைவர் ரத்னசிறி களுபஹன தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், திணைக்களத்தின் 1500இற்கும் அதிகமான ஊழியர்கள் ஓய்வு பெற முன்வந்துள்ளனர். இருப்பினும், அவர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் இழப்பீடுகளை வழங்குவதற்கான நிதி திறைசேரியால் அனுமதிக்கப்படாததால், திணைக்களம் கடந்த சில மாதங்களாக நெருக்கடியைச் சந்தித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த நிலையில், ஓய்வூதியம் வழங்குவதற்காக அரசாங்கம் 3,764 மில்லியன் ரூபாவை அனுமதித்துள்ளது. அரச பொறியியல் கூட்டுத்தாபனம் தற்போது கட்டிட நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதில்லை எனவும், பராமரிப்பு சேவைகள், வழிகாட்டல் மற்றும் முன்னர் ஒப்பந்தம் செய்யப்பட்ட சீமெந்து உற்பத்திப் பணிகளில் மாத்திரமே ஈடுபடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.