காணி உரிமம் கோரி கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்..(காணொளி)

244 0

காணி உரிமம் கோரி கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிளிநொச்சி பன்னங்கண்டி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்கள் தமது குடியிருப்பு காணிக்கான ஆவணம், அடிப்படை வசதிகள், நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன இதுவரை கிடைக்கவில்லை என்று கவலை வெளியிட்டுள்ளனர்.

இவ்வளவு காலமும் அடிப்படை உரிமை இல்லாத மக்களாக வாழ்ந்து விட்டோம் இனியும் வாழ முடியாது தயவு செய்து எமக்கான காணி உரிமத்தினை வழங்குங்கள் என்றுகோரி கவனஈர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
கவனயீர்ப்பு மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

அத்துடன் தமக்கான காணி உரிமம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரம் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.