பாராளுமன்ற உறுப்பினராக அலி சபீர் மௌலானா தெரிவு

51 0

அலி சாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி, நஸீர் அஹமட்டினால் வெற்றிடமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அலி சாஹிர் மௌலானா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் நசீர் அஹம்ட்டை கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்குவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்த தீர்மானம் செல்லுபடியாகும் என உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.