தமிழ் கால்நடை பண்ணையாளர்களுக்கு எதிராக பௌத்த பிக்கு தலைமையிலான சட்டவிரோத குடியேற்ற வாசிகள் போராட்டம்.

154 0

மயிலத்தமடு மாதவனை சட்டவிரோத சிங்கள குடியேற்றத்துக்கு  ஆதரவு தெரிவித்தும்  பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு எதிராகவும் மட்டக்களப்பு  மாவட்டத்தில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுவரும் பௌத்த பிக்குவான அம்பிட்டிய சுமணரத்தின தேரர் தலைமையில் சட்டவிரோத சிங்கள குடியேற்ற வாசிகள் மட்டக்களப்பு நகரில் இன்று எதிர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

மயிலத்தமடு தமிழ் கால்நடை பண்ணையாளர்கள் தொடர்சியாக முன்னெடுத்துள்ள போராட்டம் இன்றோடு 23 நாட்களை எட்டியுள்ளது.

தமது கால்நடைகளை மேய்ச்சல் செய்யும் நிலங்களை சிங்கள குடியேற்றவாசிகள் ஆக்கிரமித்தது வருவதாகவும் அந்த நிலங்களை ஆக்கிரமிப்பதற்காக தமது கால்நடைகளை கொன்று குவித்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ள தமிழ் கால்நடை வளர்ப்பாளர்கள் தமது நிலங்கள் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்த கோரி இந்த தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றயதினம் மட்டக்களப்பு நாடாளுமனர் உறுப்பினர் சாணக்கியன் தலைமையில் பாராளுமன்றில் பண்ணையாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது . அதில் இன்று மட்டக்களப்புக்கு வருகைதரும் ரணிலுக்கு எதிராகபோராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் சாணக்கியன் பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று ரணில் மட்டக்களப்புக்கு வருகைதந்துள்ள நிலையிலேயே பௌத்த பிக்கு தமலையிலான சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் தமிழ் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் சாணக்கியனுக்கும் எதிராக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.