சமீர சேனாரத்ன மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; விசாரணைகள் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு

226 0

மாலபே தனியார் மருத்துவமனையின் பிரதான நிறைவேற்று அதிகாரி சமீர சேனாரத்ன மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு மாற்றப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் தேடப்படுபவர்களான முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், மேலுமொரு சந்தேகத்துக்குரியவரும் கடுவல நீதிமன்றில் நேற்று சரணடைந்தனர்.

எனினும், குறித்த இருவரும் அந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்துக்குரியவர்கள் அல்ல என அமைப்பு ரீதியான குற்றங்களைத் தடுக்கும் காவல்துறையினர் மற்றும் மீரிஹாண விசேட காவல்துறை பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரும் சந்தேகத்துக்குரியர்கள் என முன்னர் குறிப்பிட்டு, பின்னர் இவ்வாறானதொரு அறிவிப்பை காவல்துறையினர் விடுத்துள்ளதால், சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பதாக கடுவலை நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.