கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள பெண்கள் பாடசாலைக்கு இன்று முதல் சிறப்பு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொரளை யசோதரா பெண்கள் பாடசாலைக்குள் கொழும்பு மஹாநாம கல்லூரி மாணவர்கள் நேற்றைய தினம் அத்துமீறி உள்நுழைந்த்தையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மஹாநாம கல்லூரி மாணவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.