வீட்டில் இருந்து முதியவர் ஒருவர் கடந்த 24ஆம் திகதி வெளியே சென்ற நிலையில், அவர் காணாமல் போனதாக அவரது உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த முதியவர் உடுவில் பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து சடலமாக வியாழக்கிழமை (28)மீட்கப்பட்டுள்ளார்.
உடுவில் மல்வம் பகுதியைச் சேர்ந்த அமிர்தலிங்கம் செல்வராசா (வயது 71) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.