ஆவா குழு உறுப்பினர்கள் கொழும்பில் கைது

235 0

யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா குழு உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படும் இருவர் கொட்டாஞ்சேனையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் அவர்கள் கைதானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களிடம் இருந்து கைக்குண்டு ஒன்றும், மூன்று வாள்கள் மற்றும் கோடரி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த தினம் தெஹிவளையில் வைத்து ஆவாக்குழு உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.