தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தாக்கல் செய்த சீராய்வு பிணை மனு கொழும்பு மேல்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேல்நீதிமன்ற நீதிபதி இந்த பிணை நிராகரிப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் சட்டபூர்வமாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸவின் பிணை மனுவை நிராகரித்துள்ளதாக மேல்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
அரச வாகனங்களை முறைகேடான வகையில் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் விமல் வீரவன்ச எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.